கல்யாண பந்தல்கால் குழியில் சுரப்பாய்,
என் பாட்டி சொல்ல நான் கேட்டேன்.
ஆயிரம் அடி ஆழ்குழாயில் சுரக்க மறுப்பாய்,
என் பேத்தி சொல்ல நான் கேட்பேனோ - ஐயோ!!
நீர்நிலை நாடி, தோழர்கள் பதுங்க,
நான் புடிக்க, அனுபவித்த அந்த குளியல்,
ஒரு குவளை தண்ணீரில் காக்கா குளியலாய்,
என் பேரன் பெருவானோ - ஐயோ!!
நீச்சல், நீர்பந்து, மூச்சடைத்தல், வாழைமர சவாரி
இவை என்னவென்று என் பேரன் ஏட்டில் படித்து,
தேர்வில் எழுதி முதல் மதிப்பெண் வாங்கி,
நான் அறிவேனோ - ஐயோ!!
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
அழியா பழமொழி அதன் சாவை
எதிர்நோக்கி உள்ளதா? - ஐயோ!!
நேற்று ஆபரனபொருள்,
இன்று உணவுப்பொருள் போல நாளை தண்ணீரும் ,
ஏற்றுமதி இறக்குமதி வியாபார பொருள் ஆகிவிடுவோமா? - ஐயோ!!
இத்தகைய நிலைக்கு காரண பிசாசை கழுத்தை நெருக்காவிடில், இது அத்துனையும் சாத்தியம் தான். கூடுதலாக இதுவும் சாத்தியம்.
"ஒரு துளி தண்ணீருக்கு ஒரு டம்ளர் இரத்தம் சிந்த வேண்டிருக்கும்".
No comments:
Post a Comment