Search This Blog

Sunday 12 December 2010

ஒரு டம்ளர் இரத்தம் ஒரு துளி தண்ணீர்



கல்யாண பந்தல்கால் குழியில் சுரப்பாய்,
என் பாட்டி சொல்ல நான் கேட்டேன். 
ஆயிரம் அடி ஆழ்குழாயில் சுரக்க மறுப்பாய்,
என் பேத்தி சொல்ல நான் கேட்பேனோ - ஐயோ!!

நீர்நிலை நாடி, தோழர்கள் பதுங்க,
நான் புடிக்க, அனுபவித்த அந்த குளியல்,
ஒரு குவளை தண்ணீரில் காக்கா குளியலாய், 
என் பேரன் பெருவானோ - ஐயோ!!

நீச்சல், நீர்பந்து, மூச்சடைத்தல், வாழைமர சவாரி
இவை என்னவென்று என் பேரன் ஏட்டில் படித்து,
தேர்வில் எழுதி முதல் மதிப்பெண் வாங்கி, 
நான் அறிவேனோ - ஐயோ!!

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு 
அழியா பழமொழி அதன் சாவை 
எதிர்நோக்கி உள்ளதா? - ஐயோ!! 

நேற்று ஆபரனபொருள், 
இன்று உணவுப்பொருள் போல நாளை தண்ணீரும் , 
ஏற்றுமதி இறக்குமதி வியாபார பொருள் ஆகிவிடுவோமா? - ஐயோ!!

இத்தகைய நிலைக்கு காரண பிசாசை கழுத்தை நெருக்காவிடில், இது அத்துனையும் சாத்தியம் தான். கூடுதலாக இதுவும் சாத்தியம். 

"ஒரு துளி தண்ணீருக்கு ஒரு டம்ளர் இரத்தம் சிந்த வேண்டிருக்கும்".

No comments:

Post a Comment