Search This Blog

Wednesday 28 September 2011

மூலிகை மருத்துவம்.

இயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம் எனப்படுகிறது. இந்த மூலிகை மருத்துவத்தை சித்த மருத்துவர்களும், மரபு வழி மருத்துவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இம்மருத்துவமுறையில் “உணவே மருந்து, மருந்தே உணவு” என்கிற கோட்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது.



Saturday 10 September 2011

வட்டம்- 1 அளவிலான அறிவியல் கண்காட்சி 2011.

                            புதுச்சேரி பள்ளிகல்வித்துறையின் வட்டம் 1 சார்பில் அறிவியல் கண்காட்சி 2011 , 02-09-2011 மற்றும்  03-09-2011 ஆகிய தேதிகளில் அரசு ஆரம்பப் பள்ளி - தட்டாஞ்சாவடியில்  நடைபெற்றது. விழாவில் வட்டங்கள் - 2,3,4,5 இன் ஆய்வாளர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் பள்ளி கல்வி இயக்குனர் திரு. க.பன்னீர்செல்வம் , முதன்மை கல்வி அதிகாரி திரு. அனுமந்தன் , அனைவர்க்கும் கல்வி திட்ட இயக்குனர் திரு.பார்த்தசாரதி,பெண்கல்வி இயக்குனர் திருமதி.மீனாட்சி தொடக்கநிலை கல்வி இயக்குனர் திரு.ரகுபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர். விழா ஏற்பாடுகளை முதலாம் வட்ட ஆய்வாளர்  திரு.அமிர்தகணேசன்  மற்றும் முதலாம் வட்ட ஆசிரியர் ஆசிரியைகள் தலைமை ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.
                                24 பள்ளிகளின் சார்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவியல் படைப்புக்களை செய்து பார்வைக்கு  வைத்திருந்தனர். சுமார் 324  அறிவியல் படைப்புகள் விழாவில் இடம்பெற்றது.ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவர் படைப்புகள் சார்பில் 3 பரிசுகள் வழங்கப்பட்டன.அனைத்து ஆசிரியர் படைப்புகள் சார்பில் 3 பரிசுகளும் அனைத்து மாணவர்கள் சார்பில் 3 பரிசுகளும் வழங்கப்பட்டது.கண்காட்சி நிறைவு விழா 03-09-2011 அன்று மாலை 3:00 அளவில் நடைப்பெற்றது .மேலும் கண்காட்சியை காணவந்திருந்த அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அறிவியல் வினாடி- வினா போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன .மேலும் ஆசிரியைகளுக்கு உப்பில் வண்ணப்பொடி பயன்படுத்தி ரங்கோலி போட்டியும் நடைபெற்றது. அதற்கு 3 பரிசுகள் வழங்கப்பட்டன . மேலும் கலந்துக்கொண்ட அனைத்து ஆசிரியைகளுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும்  பரிசு வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்டு அறிவியல் படைப்புகள் செய்த அனைத்து ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.






































Monday 5 September 2011

செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம். மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது.
'எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.   அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள்.
Radhakrishnan42 டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் ராதகிருஷ்ணண் அவர்களின் பிறந்த நாளைத் தான் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும். சிறு குழந்தைகளுக்குச் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும். அப்படி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களின் மழலை பேச்சும், மழலைச் சரிப்பையும் காணும் பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர்; உன்னத உணர்வு மனதில் ஏற்படும். அதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. அங்கு ஆரம்பப் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை. ஆசிரியர் பணியில் சேர்ந்த பொழுது ஆரம்ப கல்வியை மாணவ, மாணவிகள் முடித்துச் செல்லும் பொழுது உண்மையிலேயே பெரிய இழப்பாக இருந்தது. அது தற்பொழுது பழகிவிட்டது. ஒவ்வொருவரும் ஒரு குணம், மாறுபட்ட குணாதிசயங்கள், மாறுபட்ட சிந்தனைகள் என்று ஓர்; இனிய கலவைகளை ஒரே இடத்தில் பார்க்க நினைத்தால் பள்ளிகளுக்குச் செல்லலாம்.

அர்ச்சுணனுக்கு ஒரு துரோணாச்சாரியார் போல்,விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஓர்; ஆசிரியர்கள் இன்றும் வாழ்வியல் ஆசானாக இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறோம். மாதா பிதா டாக்டர், இன்ஜினியர் என்று நாம் சொல்வது இல்லை. தமிழ்சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான்.
ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை., நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.

எங்கள் பள்ளியில் இன்று ஆசிரியர் நாள் விழா சிறப்பாக  கொண்டாடப்பட்டது. எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. K.லட்சுமி நாராயணன் மற்றும் அரிமா சங்கம் ப்ரைடு சார்பில் கலந்துக்கொண்டு எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து பரிசு தந்து  கௌரவப்படுத்தினார்.