மாணவர்களின் படைப்பு ஆற்றல் பெரும் சிறப்பு வாய்ந்தது . தூண்டுகோலாக ஆசிரியர் இருப்பின் அவர்களின் அறிவு வளர்ச்சியும் மன வளர்ச்சியும் விரிவு அடைந்துகொண்டே செல்லும். அவ்வாறு விளங்கும் குழந்தைகளுக்கு அவ்வபோது பாடப்பொருள் சார்ந்த திறன்களை அன்றி ஆற்றல், சிந்தித்தல் சார்ந்த திறன்களையும் வளர்ப்பது ஆசிரியரின் கடமை ஆகும் .அவ்வாறு எங்கள் பள்ளியில் என் வகுப்பு மாணவர்கள் இலைகள், தழைகள், பூக்கள் போன்றவற்றை கொண்டு இந்தியாவின் மாதிரியை வடிவமைத்தனர். இச்செயலின் பொழுது மாணவர்கள் மகிழிச்சியுடனும் மிகுந்த ஆர்வத்துடனும் செயல்பட்டனர். அவர்களின் உள்ளே இடம்பெற்று இருந்த படைப்பு ஆற்றல் மற்றும் கலைநயம் அப்போது தான் வெளிகானப்பட்டது .உங்கள் பார்வைக்காக இங்கே.....
இடம் - வகுப்பறை
நேரம் - மாலை 2 :30 மணி
நாள் - 20-07-2011
அதேப்போல விலங்குகளின் மற்றும் பறவைகளின் பொம்மைகள் ஆகியவற்றின் மூலம் காடு போன்ற மாதிரி அமைப்பையும் உருவாக்கினர். பார்வைக்கு நேர்த்தியாகவும் சிறப்பாகவும் இடம்பெற்றது.
நேரம் - மாலை 2 :30 மணி
நாள் - 05-08-2011
No comments:
Post a Comment